‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்ச்சிகள்!

132

சென்னை:

ருசிக்கலாம் வாங்க பொங்கல் கொண்டாடம்”

இறையூர் கிராமத்தில் உள்ள நியூ லைப் சாரிடபிள் டிரஸ்ட் இல் கிராமிய கலைஞர்கள், கிராமத்து மக்களுடன் தொகுப்பாளினி மீனாட்சி மற்றும் நமது ருசிக்கலாம் வாங்க சமையல் கலைஞர்கள் யோகம்பாள் மாமி, ஜெயந்தி,மீரா கிருஷ்ணன், மற்றும் சுபாஷினி அவர்கள் சேர்ந்து பல வகையான  விளையாட்டு போட்டிகளுடன் கலகலப்பாக பொங்கல் வைத்து கொண்டாடும் “ருசிக்கலாம் வாங்க பொங்கல் கொண்டாடம்” நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி 15 காலை 8:00மணிக்கு ஒளிபரப்பாகிறது.

“சவுண்ட் பார்ட்டி”

திருமதி.ஹாமினா மற்றும் திருமதி.டாத்திரி  அவர்கள் திரையில் வெளியான சிறந்த பாடல்களை பாட்டுடனும் நடனத்துடனும் பலவிதமான சுவாரசியமான சுற்றுகளுடன்  தொகுப்பாளர் கமல் மற்றும் ஐஸ்வர்யா ஜாலியாக  பேசியும் சந்தோஷமாக விளையாடியும் கொண்டாடும் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி “சவுண்ட் பார்ட்டி”  புதுயுகம் தொலைக்காட்சியில்  ஜனவரி 15 மதியம் 3:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

“பட்டிமன்றம்”

உலகெங்கும் உள்ள தமிழ் சமூக மக்கள் விரும்பிய ரசிக்கும் நிகழ்ழ்சிகளின் முதன்மையாக இருப்பது பட்டிமன்ற நிகழ்வுகள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்காக லிஷா மற்றும் லிஷா இலக்கிய மன்றம் இணைந்து ஒரு மாபெரும் பட்டிமன்றத்தை சிங்கபூரில் வெற்றிகரமாக நடத்தியது. வருடம் தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் இன்றைய இளைய சமுதாயத்தின் போக்கு வருந்தும் படி உள்ளதா..? வாழ்த்தும் படி உள்ளாதா..? என்ற தலைப்பில்  பிரபல எழுத்தாளர்.திரு.பழகருப்பையா தலைமையில் தமிழகத்தை சேர்ந்த திரு.ரவிக்குமார், திருமதி.சந்தாமணி மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த திரு.கண்ணன் சேஷாத்திரி, திரு.தமீம் அன்சாரி திருமதி.கங்கா மற்றும் அர்ஜீன் நாராயணன்  ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை ட்ரெடிங் மற்றும் SGD கனெக்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த பட்டிமன்ற நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடதக்கது இந்த சுவராஸ்யமான பட்டிமன்றம் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி 15 காலை 9:00 ஒளிபரப்பாக இருக்கிறது

பட்டி Vs City

கிராமமா…? நகரமா..? நாட்டுபுற பாடலா ..? மேற்கத்திய இசையா..? பாடல்களோடு மோதி விளையாடிய இளம் பாடகார்கள் இசையமைப்பாளர் திரு. கங்கை அமரன் நடுவராக பங்கேற்ற இசை போட்டியில் பாடகர் ஸ்ரீ ராம் மற்றும் நாட்டுபுற பாடகர்.சித்தன் ஜெயமூர்த்தி ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக போட்டி போட்டு பாடல்களை பாடினார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினார்   இசையமைப்பாளர் திரு.கார்த்திக்ராஜா தனது இசை அனுபவங்களை சுவராஸ்யா பாடல்களோடு பகிர்ந்து கொண்டார் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி பட்டி vs City’ இரண்டு பாகங்களாக  நமது புதுயுகம் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது