கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு “கெளரி” என்கிற புத்தம் புதிய மெகாத்தொடர்!

185

CHENNAI:

நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு “கெளரி” என்கிற புத்தம் புதிய மெகாத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

மரையனூரின் காவல் தெய்வமான மாசாணி அம்மனையும்தெய்வீக குழந்தையான கெளரியையும் மையப்படுத்தி நகரும் இந்த கதையில்தாய் தந்தையை இழந்து தனது சித்தி துர்காவுடன்கெளரி வாழ்ந்து வருகிறாள்.

தனது தாய்தந்தையை கொன்ற அந்த கிராமத்தின் ஜமீன் வம்சத்தை அழிக்க பிறந்திருக்கிறாள் கெளரி. ஜமீன் குடும்பத்துக்கு தொடர்ந்து பிரச்சனை மேல் பிரச்சனையாக வரஅவர்களின் குடும்ப ஜோதிடர் காலனை சந்திக்ககெளரியை பழி கொடுத்தால் தான் இவர்களுக்கு விடிவுகாலம் என காலன் சொல்லமீண்டும் தனது சொந்த கிராமத்துக்கு குடும்பத்தோடு வருகிறது ஜமீன் குடும்பம்.

அங்கு கெளரியை கொல்லும் முயற்சி தோல்வியில் முடியமேலும் கெளரி ஜமீன் குடும்பத்துக்கு இடைஞ்சலாக இருக்ககெளரிக்கு மிகவும் பிடித்தசித்தி துர்காவை வைத்து கெளரியை கொல்ல ஜமீன் குடும்பம் முடிவு செய்கிறது.

அதன்படி ஜமீன் வீட்டில் வேலை செய்யும் துர்காவைஜமீனின் மகன் அசோக்குக்கு திருமணம் செய்து வைக்க ஜமீன் முடிவு செய்யஅசோக் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கஅசோக்கின் அம்மாவுக்ம், சித்திக்கும் தில் விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்யஅசோக் – துர்கா திருமணம் நடைபெறுமாஅப்படி நடக்கும் பட்சத்தில் கெளரிதுர்காவுடன் ஜமீன் குடும்பத்துக்கு செல்வாளாநடக்கப்போவது என்னஎன்கிற உச்சகட்ட பரபரப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.