‘ஜோஷ்வா இமை போல் காக்க’ – திரைப்பட விமர்சனம்!

152

CHENNAI:

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’.. இப்படத்தில் வருண், ராஹே, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், திவ்யதர்ஷினி, விசித்ரா, கிட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் கதை எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கார்த்திக் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

இப்படத்தின் கதையை பொருத்தவரையில்,

சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் அவனுக்கு எதிராக வாதாடும் பெண் வக்கீல் கதாநாயகி ராஹே.. இந்த போதை பொருள் கடத்தும் தலைவனுக்கு ஆயுதண்டனை கிடைக்கும் என்கிற சூழ்நிலை இருப்பதால் அதற்கு உண்டான சாட்சி சொல்பவர்களை கூலிப்படை வைத்து சிறையில் இருந்துக் கொண்டே அவர்களை அழிக்க திட்டமிடுகிறான். கதாநாயகி ராஹே, மற்றும் அவரது கூட்டம் கடத்தல் தலைவனுக்கு எதிராக சாட்சியங்களை திரட்டி நீதிமன்றத்தில் ஒப்படைக்க முயல்கிறது. இந்நிலையில் கதாநாயகன் வருண் சர்வதேச கும்பல் சொல்லும் நபர்களை கொலை செய்யும் அடியாளாக வலம் வருகிறார். இப்படி ஒரு கொலை செய்யும் போது கதாநாயகி ராஹேவை சந்திக்கிறார். நட்பாக பழகும் இவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது. அப்போது ராஹேவிடம் தான் செய்யும் தொழிலை பற்றி உண்மையை கூறும் போது கதாநாயகி ராஹே, பயந்து போய் கதாநாயகன் வருணை விட்டு பிரிந்து அமெரிக்காவில் சென்று விடுகிறார்.

இந்த சூழ்நிலையில் தன்னைப் பார்த்து பயந்து அமெரிக்காவிற்க்கு சென்ற ராஹேவுக்கு, சர்வதேச போதை கடத்தல் கும்பல் தலைவன் மூலம் ஆபத்து ஏற்படுகிறது.  ராஹேவை அந்த ஆபத்திலிருந்து  காப்பாற்றுவதற்காக வருண் நியமிக்கப்படுகிறார். இதற்கு உறுதுணையாக திவ்யதர்ஷினி கூடவே இருந்து உதவி செய்கிறார். இதற்கிடையில் பல கூலிப்படைகள் ராஹேவை கொல்வதற்கு முயற்சி செய்கின்றன.  ஆனால் அந்த கூலிப்படைகளை அடித்து விரட்டி,  வருண் எதிர்த்து போராடி, தனது காதலி ராஹேவை  காப்பாற்றுகிறார். இறுதியில் சர்வதேச போதை கடத்தல் தலைவனிடம் இருந்து ராஹே தப்பித்தாரா? கதாநாயகி ராஹே சர்வதேச போதை கடத்தல் தலைவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தினாரா?  இல்லையா? என்பதுதான் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’  என்ற இப்படத்தின் மீதி கதை.

இப்படத்தில் ஜோஷ்வா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வருண் அதிரடி ஆக்சன் கதாநாயகனாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தன் திறமையை வெளிப்படுத்தி சூப்பராக நடித்திருக்கிறார்  இவர் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது மாறுபட்ட முறையில் ஒவ்வொரு காட்சியிலும்  நடிப்பில் பெரிய சவாலை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில்  நடித்து இருந்தாலும், இப்படத்தில் கதாநாயகனாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் இவர்  தனது திறமையை அசத்தலாக வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார். இனி இவர் எந்த படத்தில் நடித்தாலும் ஆக்சன் ஹீரோவாக வலம் வர தயாராக இருக்கிறார் என்பதை மிக தெளிவாக சொல்லலாம்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ராஹே, தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப, பல அழுத்தமான காட்சிகளில் அதன் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்து. காதல், பயம் ஆகிய உணர்வுகளை தனது கண்களின் மூலமாகவே வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.

இப்படத்தில்  வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடித்திருக்கிறார். அவருக்கும் ஆக்ஷன்  காட்சிகளில் பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதால் கதாநாயகனுடன் பயங்கரமாக சண்டை போட்டு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து பாராட்டு பெறுகிறார்.

சர்வதேச கூலிப்படையை கண்ட்ரோல் செய்யும் கதாபாத்திரத்தில் திவ்யதர்ஷினி தனது நடிப்பு மூலம், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திவிடுகிறார் என்று சொன்னால் மிகையாகாது.

கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் கிட்டி, கடைசிகாட்சியில் வந்தாலும், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்துவிடுகிறார். மன்சூர் அலிகான், விசித்ரா ஆகியோர் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து போகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் கார்த்திக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசையை மிக அருமையாக சிறப்பாக கையாண்டு இருக்கிறார். படத்தொகுப்பாளர் ஆண்டனி படத்தொகுப்பு பணி திரைப்படத்திற்கு கூடுதல் சிறப்பு.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பதை பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் அவரை பாராட்டலாம்..ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் ஒவ்வொரு ரகத்தில் வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.

நவீன துப்பாக்கிகளை அலட்சியமாகப் பயன்படுத்தும் உலக அளவிலான கூலிக்கொலைகாரன், அமெரிக்காவில் மெக்ஸிகன் போதைப்பொருள் கடத்தல் கூட்டம் என்று கதைக்களத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டு, காதல் காட்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை உருக வைக்கும் இயக்குநர் கெளதம் மேனன், காதல் காட்சிகள் அதிகம் இல்லாமல், அதிரடி சண்டைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதி ரசிகர்களை ரசிக்க வைத்து இந்தப் படத்தைக் கொண்டுபோயிருக்கிறார் கெளதம்மேனன்.

மொத்தத்தில், ‘ஜோஷ்வா : இமை போல் காக்க’ படம் அதிரடி, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.