’சூது கவ்வும் 2’ திரைப்பட விமர்சனம்!

113

சென்னை:

மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, கவி, கல்கி, அருள்தாஸ், யோக் ஜேபி, கராத்தே கார்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் பட்ம்தான் ‘சூது கவ்வும்-2’  இப்படத்தை எழுதி  இயக்கி இர்ப்பவர் எஸ்.ஜே.அர்ஜுன்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது சூது கவ்வும் 2.

கொலை கொள்ளை என்றில்லாமல் சின்னச் சின்ன சம்பவங்கள் செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் திருப்தி அடையும் குட்டி கேங்ஸ்டர் லீடர்  மிர்ச்சிசிவா.  அவருக்கு எப்போதும் இரண்டு அடியாட்கள் கூடவே இருப்பார்கள். அவ்வப்போது சிலரை கடத்தி வந்து சொற்ப தொகையை வாங்கிக்கொண்டு  அவர்களை விடுவித்து  அதில் வரும் வருமானத்தில் விஸ்கி, பிராந்தி,சிகரெட்  என்று பொழுதை கழிக்கிறார்கள் மிர்ச்சி சிவா கேங். இந்த சூழ்நிலையில் அரசியல்வாதி எம் எஸ் பாஸ்கருக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் நேர்மையான அரசியல்வாதியான வாகை சந்திரசேகர் அருமை பிரகாசம்  என பெயர் வைக்கிறார். பெயர் வைத்து விட்டு  முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்ள செல்லும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து கோமா நிலைக்கு வாகை சந்திரசேகர் தள்ளப்படுகிறார். கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான வாகை சந்திரசேகருக்கு திடீரென நினைவு திரும்புகிறது. அவரது உதவியாளராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மூலம் ராதாரவி மற்றும் அவரது அமைச்சர்கள் செய்யும் ஊழல் பற்றி தெரிந்து கொள்கிறார் வாகை சந்திரசேகர்.

இதனால் அதிர்ச்சியடையும் வாகை சந்திரசேகர் தன் செல்வாக்கு இன்னும் இருக்கிறது என நினைத்து ராதாரவியிடம் கண்டிப்பாக நடக்க, உடனே ராதாரவி செய்யும் அராஜகத்தால் கட்சியை விட்டே வெளியேறுகிறார் . இதனையடுத்து வாகை சந்திரசேகர் புதிய கட்சியை தொடங்கி மக்கள் செல்வாக்கை பெறுகிறார். இந்நிலையில் தேர்தல் வர இருக்கும் நேரத்தில் முதலமைச்சர் ராதாரவி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை  நிதி அமைச்சர் கருணாகரனிடம் ஒப்படைக்கிறார். அதன்படி, தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய திட்டமிடும் கருணாகரன் அதற்காக ரூ.60 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கி ஒன்றில் டெபாசிட் செய்து, அந்த பணத்தை உடனடியாக விநியோகம் செய்வதற்காக ஒரு கருவியை வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது மிர்ச்சி சிவா கருணாகரனை கடத்தி விடுகிறார். கடத்தப்பட்ட கருணாகரன் அதிலிருந்து மீட்கப்பட்டாரா? இல்லையா? என்பதுதான் “சூது கவ்வும்-2′ படத்தின் மீதிக் கதை.

 மிர்ச்சி சிவா குருநாத் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பைமிக  சிறப்பாக வெளிப்படுத்திள்ளார். மது போதை இறங்கினால் கண் முன் பாம்புகள் இருப்பது போல் தோன்றுவதால், எந்த நேரமும் சரியான அளவில் போதையுடன் வலம் வரும் கதாபாத்திரத்தை நகைச்சுவையாக கையாண்டிருக்கும் மிர்ச்சி சிவா, சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் அவரது நடிப்பு போரடிக்க வைக்கிறது.மிர்சி சிவாவை இந்த படத்தில் கேங்ஸ்டர் ஆக்கி அவரது தோற்றத்துக்கு ஒரு புது பரிமாணத்தை  கொடுத்திருக்கிறார்கள்.

சிவாவின் கனவு கன்னியாக வரும் நாயகி ஹரிஷா ஜஸ்டின் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

இப்படத்தின் இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவுக்கு கருணாகரனுக்கு நிதியமைச்சர் அருமை பிரகாசம் என்ற முக்கியமான கதாபாத்திரம் என்பதால். அதை அவரும் நன்றாக பயன்படுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதாரவி, சிவாவுடன் வரும் கல்கி ராஜா, ‘நக்கலைட்ஸ்’ கவி, போலீஸ் அதிகாரி யோக் ஜேபி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் எட்வின் இசையில் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய தொடர்ச்சியாக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதியிருக்கும் கதையில், அரசியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது. ஆரம்பத்தில் அரசியல் கதையாக தொடங்கி முதல் பாகம் கலந்த திரைக்கதையில் அரசியல்,ஊழல், ஆள் கடத்தல் மற்றும் பணம் ஆகியவற்றை மையமாக கொண்டு விறு விறுப்புடன் காமெடி கலந்த படமாக உருவாக்கியிருக்கிறார் எஸ்.ஜே.அர்ஜுன்.

மொத்தத்தில், ‘சூது கவ்வும் 2’  படத்தை பார்த்து சிரிக்கலாம்.

ரேட்டிங் 3/5

 

RADHAPANDIAN.