சென்னை:
அஜித் குமார், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராஃப், சாயாஜி ஷிண்டே, டின்னி ஆனந்த், சுனில், உஷா உதுப், ராகுல் தேவ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ஜபரா, ஷைன் டாம் சாக்கோ, ரகு ராம், பி. எஸ். அவினாஷ், கார்த்திகேய தேவ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் ஆதிக் ரவிசந்திரன்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மும்பையில் மிகப்பெரிய தாதாவாகத் திகழ்கிறார் ‘ரெட் டிராகன்’ என்று அழைக்கப்படும் அஜித்குமார். ஆனால், அவரது தாதா வாழ்க்கையை, சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையாக வாழ வேண்டும் என்று விரும்பும் அவரது மனைவி திரிஷா அடியோடு வெறுக்கிறார். அவர் புதிதாய் பெற்றெடுத்த குழந்தையைப் பார்க்க ஆசையோடு வரும் கணவர் அஜீத்தை தடுத்து, போலீசில் சரண் அடையும்படியும், இதுவரை செய்த குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அவற்றுக்கு உரிய சிறைத்தண்டனை பெற்று, அனுபவித்து, விடுதலையாகி, நல்லவராக வந்தால் மட்டுமே தங்கள் மகனைத் தொட அனுமதிப்பேன் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறார் மனைவி திரிஷா.
அஜீத் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு காவல்துறையில் சரணடைந்து சிறைக்கு சென்று 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் மனைவி த்ரிஷா குழந்தையுடன் ஸ்பெயின் சென்றுவிடுகிறார். 18ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி மகனைப் பார்க்க ஆசையுடன் அஜீத் வருகிறார். ஆனால் மகனோ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறைக்குப் போய்விடுகிறார். தன் மகன் செய்யாத ஒரு குற்றத்துக்காக, பெரிய சிக்கலில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வருவது அஜீத்திற்கு தெரிய வருகிறது. மகனை காப்பாற்றுவதற்காகவும், அவரை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி தீர்ப்பதற்காகவும் மீண்டும் தாதாவாக மாறும் அஜீத் தன் மகனை சிறையிலிருந்து , கெட்ட சுபாவங்களைக் கையில் எடுக்கிறார் ஏ.கே. என்கிற அஜீத்.