‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்!

17

சென்னை:

வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் ,விவேக் பிரசன்னா ,சம்பத் ராம் மற்றும் பலர் நடித்துள்ள இணைய தொடர்தான் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள’ மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற இந்த இணைய தொடரின் கதையைப் பொருத்தவரையில்,

செவ்வேலி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் வைபவ் முருகேசன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக் ஆகியோர் கிரிக்கெட் ஆர்வத்தில் அணி சேர்த்து விளையாடுகிறார்கள் . ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்கிற பெயரில் ஒரு அணியை உருவாக்கி நன்றாக விளையாடி வெற்றி பெறுகிறார்கள். அந்த கிராம பஞ்சாயத்து தலைவராக இருக்கும் மொட்டை ராஜேந்திரனின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதன் இறுதிப் போட்டியில் வெல்லும் பணத்தை வைத்துக் கொண்டு சென்னை வந்து தல டோனி ஆடும் கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் கனவுடன் அந்த மூன்று இளைஞர்களும் இருக்கிறார்கள்.  அந்த மூன்று இளைஞர்களும் தங்களது கிரிக்கெட் அணியில் இணைந்து .கால் இறுதி அரையிறுதி வரை செல்கிறார்கள். .ஆனால் மொட்டை ராஜேந்திரன் திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விடுகிறார் .அதனால் கிரிக்கெட் போட்டி நடக்காமல் அவர்களின் கனவு பலிக்காமல் போய் விடுகிறது .

அதனால் அதனால் இஸ்லாமியரான் விவேக் பிரசன்னாவிடம் கடன் வாங்கிக் கொண்டு கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்குச் சென்னைக்கு வருகிறார்கள். இவர்களுடன் கதாநாயகி லாவண்யாவையும் அழைத்து செல்கிறார்கள்.சென்னைக்கு வந்த அவர்கள் தங்களது நண்பனின் அறையில் தங்குகிறார்கள். எப்படியாவது தல டோனி ஆடும் கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போலியான டிக்கெட்டை வாங்கி ஏமாறுகிறார்கள். கிரிக்கெட் பார்க்க சென்னை வந்தவர்களுக்குப் பல வேதனையான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் அவர்கள் அறையில் தங்கி இருந்த வார்டன் மூலமாக கிரிக்கெட்  போட்டி சார்ந்த சூதாட்டத்தில் சம்பத் ராஜுடன் இணைந்து அந்த நால்வரும் ஈடுபடுகிறார்கள். அந்த சூதாட்டத்தின் மூலம் நால்வரும் பணம் சம்பாதிக்கிறார்கள். இறுதியில் வைபவ் முருகேசன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக் மற்றும் லாவண்யா ஆகியோர் தல டோனி ஆடும் கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்தார்களா? இல்லையா? என்பதுதான்  ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணைய தொடரின் மீதிக் கதை.

கிரிக்கெட் விளையாட்டை பார்த்தி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்து அவஸ்தைபடும் வைபவ் முருகேசன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், லாவண்யா ஆகிய  நால்வரும் கதையின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வாவண்யா தவிர மற்ற மூவரும் புதுமுகங்களாக இருப்பதால் அந்த மண்ணின் மைந்தர்களாக உண்மையான கதாபாத்திரங்களாகவே காட்சி அளிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் ராஜ்குமார் மற்றும் அவினாஷ். இருவரும் கிரிக்கெட் போட்டிகளை அனைவரும் ரசிக்கும் விதத்தில் தத்ரூபமாக படமாக்கி உள்ளனர். இணையத் தொடராக இருந்தாலும் திரைப்படத்தைப் போலவே நல்ல பாடல்களை கொடுத்து, பின்னணி இசையும் குறை வைக்காமல்  இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் பரத்.

இந்த இணைய தொடரை பொருத்தவரையில் ஒரு நேர்மையான, உணர்வுப்பூர்வமான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கிரிக்கெட் ஆர்வமுள்ள துடிப்புள்ள இளைஞர்கள் கஷ்டப்படுவதையும், அவர்களது ஆர்வத்தையும் யதார்த்தமாகவே இயக்கி இருக்கிறார் இயக்குநர் சவிர் சுதாகர்.

மொத்தத்தில், “மம்பட்டியான் ஸ்டார்ஸ்”  இணைய தொடர் நட்பு, கனவு, கிரிக்கெட் மீதான ஒரு காதல் போன்ற எல்லாவற்றையும் ரசிக்கும்படியான உன்னதமான தொடர்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.