‘ஹார்ட்டின்’ திரைப்பட விமர்சனம்!

74

CHENNAI:

டிரைடென்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் தயாரித்திருக்கும் ‘ஹார்ட்டின்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர் குமார்.​ இப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா, வாட்சப் மணி, டெப்னிதா,பிரகதி ,உமா பத்மநாபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் ‘தமிழ் பவன்’ என்ற உணவகத்தை நடத்தி வரும் whatsapp மணி என்ற தனது நண்பருடன் இணைந்து சனந்த் சமையல் செய்பவராக பணிபுரிகிறார். கடந்த கால காதல் தோல்வியின் காரணமாக அவர் யாரிடமும் அதிகமாக பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக வாழ்ந்து வருகிறார்.  இந்த சூழலில் ஒரு நாள் தனது நண்பன் துணையுடன் ஜெய்ப்பூரில் உள்ள சுற்றுலா தளத்திற்கு செல்ல நேரிடுகிறது.  அப்போது அங்கே சனந்த் ஒரு தமிழ் பெண்ணை சந்திக்கிறார். அவள் பெயர் சாதனா. அதன் பிறகு ஒரு நாள் சனந்த்  பணிபுரியும் ஹோட்டலுக்கு வரும்போது சனந்த் மீது காதல் கொண்டு ஐ லவ் யூ சொல்லிவிடுகிறார் சாதனா.  ஆனால் சனந்த் மீண்டும் ஒரு பெண்ணுடன் காதலா? என்று யோசனை செய்து சாதனாவை காதலிக்க மறுக்கிறார். ஆனால் சாதனாவோ சனந்திடம் எதற்காக என்னை காதலிக்க மறுக்கிறீர்கள் என்று கேள்விகள் கேட்க, அப்போது ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து விஷயத்தை சொல்கிறார் .அது மட்டும் இல்லாமல் அவள் தன்னை விட்டுப் பிரிந்து அமெரிக்காவை சென்று விட்டதாகவும் கூறுகிறார்.

இந்த சூழலில் சாதனாவை காதலிக்க ஒப்புக்கொண்ட சனந்த் ஒரு விபத்தில் காயமடைந்து பழைய நினைவுகளை மறக்கிறார். அதன் பிறகு நினைவுகள் வந்ததும் பழைய காதலி மடானோவை பற்றியே கேட்டுக் கொண்டிருக்கிறார். பழைய நினைவுகளை மறந்து போன சனந்த்தின் நிலையைக் கண்டு அமெரிக்காவிலிருந்து ஊட்டிக்கு வந்திருக்கும் மடானோவை சந்திக்க ஏற்பாடு செய்கிறார்கள் காதலி சாதனாவும் சனத்தின் நண்பன் whatsapp மணியும். சனந்தின் உடல்நிலையைக் கண்டு குணப்படுத்துவதற்காக ஊட்டிக்கு அழைத்து சென்ற நண்பன் whatsapp மணியும், காதலி சாதனாவும் மடானோவிடம் சனந்திற்கு ஏற்பட்ட  பிரச்சனைகளை சொல்லி  அவரை குணப்படுத்துவதில் உள்ள முயற்சிகளை செய்கின்றனர்.  ஆனால் அங்கு சனந்த் மடானோவிடம் பழைய காதலை நினைத்து நெருங்கி பழகுகிறார். அதனால் சாதனா வேதனையுடன் இருக்கும்போது சனந்தை விட்டு பிரிய நினைக்கிறார். இறுதியில் சனந்த் குணமடைந்தாரா?  சாதனாவை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘ஹார்ட்டின்’ படத்தின் மீதி கதை.

இதில்  சிவாவாக வரும் நாயகன் சனந்த் சுமாரான தோற்றத்தில் வந்தாலும் இயல்பான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். இரண்டு காதலிகளுடன் கலகலப்பு,உற்சாகம்,சோகம் ஆகிய எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்தை ஏற்று மிக சரியாகச் செய்திருக்கிறார்.

சாதனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகி இமயாவுக்கு முதல்படத்திலேயே கனமான வேடம் அமைந்திருக்கிறது. அவர் மிகுந்த அனுபவ நடிகைபோல் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. பல படங்கள் அவரை நோக்கி வரும் என்பதில் ஐயமில்லை.

மடானோ செபாஸ்டியன்,முதல் காதலை அலட்சியப்படுத்தும் போது காட்டும் நடிப்பும் மீண்டும் அதைப் புதுப்பிக்க தடுமாறித் தவிக்கும் போதும் என பல காட்சிகளில் தனது நடிப்பை சிறப்பாக  வெளிப்படுத்தி அசத்தி உள்ளார்.

கதாநாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவை யாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை மிகவும் அழகாக படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.

ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக உள்ளன. பின்னணி இசையும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர்குமார். ஒரு ,ஒரு காதல் கதையை சொல்ல நினைத்து தவறவிட்ட நினைவுகளையும், கடந்து போன வாழ்க்கையையும் இரண்டு காதலிகளை வைத்து  வேறொரு திசையில் கொண்டு சென்று, இப்படத்தி சில திருப்பங்கள் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு அவர் கொடுத்துள்ள முக்கியத்துவம் படத்தை இறுதிவரை பார்க்கும்படி ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’  காதல் உணர்வுகளை சொல்லும் படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.