சென்னை:
“அந்தரன்” என்ற இப்படத்தில் பிரஜன், இவானா வருண், அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மென், எம் கே சாம்பசிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்ப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார்
சந்தோஷ் ராவணன்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இப்படத்தின் கதாநாயகி இவானா வருண் யாரை காதலித்தாலும் அந்த நபர் பயங்கரமாக கொலை செய்யப்படுகிறார். இதனால் இவானா வருண் திருமண என்ற பேச்சு வந்தாலே யாரையும் மணந்து கொள்ள மறுத்து விடுகிறார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு பிறகு அவர் தந்தையின் வற்புறுத்தலால் உறவினரின் மகனை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணத்திற்கு நாள் பார்த்து நிச்சயம் செய்யப்பட்ட பிறகு அந்த உறவினர் மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் பயந்து போன இவானா வருண் இனி யாரையுமே திருமணம் செய்யக்கூடாது என்று என்ற மனநிலையில் இருக்கிறார். இவானா வருண் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் மரணம் அடைவதை பார்த்து அதனை விசாரணை செய்ய காவல்துறையிலிருந்து பிரஜன் வருகிறார்.
பிரஜன் இந்த மரணங்களை பற்றி விசாரிக்கும் போது சில உண்மைகள் தெரிய வருகிறது. அதாவது மரணமடைந்த அனைவரும் யாரோ ஒருவர் மூலம் தான் கொலை செய்யப்படுகிறார் என்பதை கண்டுபிடிக்கிறார் பிரஜன். இந்த சூழ்நிலையில் இவானா வருணிடம் காவல்துறை அதிகாரி பிரஜன் விசாரணை செய்யும் போது அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால் இவானா வருண் ‘என்னை திருமணம் செய்து கொள்ள நினைத்தால் அது மரணத்தை தான் போய் முடியும்’ என்று மறுக்கிறார். ஆனால் பிரஜன் எதற்கும் பயப்படாமல் இவானா வருணணுக்கு ஆறுதல் சொல்லி எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள முயற்சி செய்கிறார். இறுதியில் கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கொலையாளியையும் பிரஜன் கண்டுபிடித்தாரா ? இவானா வருணை விரும்பும் பிரஜன் அவரை திருமணம் செய்து கொண்டாரா? என்பதுதான் ‘அந்தரன்’ படத்தின் மீதி கதை.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரஜன், அதற்கேற்றவாறு உடலமைப்பை வைத்துக் கொண்டு குறிப்பிடத்தக்க வகையில் நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆக்ஷன் அல்லது ஆர்ப்பாட்டமான நடிப்பைத் தேர்வு செய்யாமல், அமைதியாக ஒவ்வொரு தடயத்தையும் ஆராயும் அதிகாரியாக அவர் இயல்பாக பொருந்தியிருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண், கதை முழுவதும் தன்னைச் சுற்றித்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார். அவர் தனது தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும் துறுதுறுப்பான நடிப்பால் பார்ப்பவர்களின் கவனம் பெறுகிறார்.
கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
படம் முழுக்க போலீஸ் விசாரணையைச் சுற்றி நகர்வதால் பரபரப்புடன் காட்சிகளை படமாக்கி, காதல் மற்றும் பாடல் காட்சிகளை வண்ணமயமாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர், கேட்கும் வகையில் பாடல்களை இசையமைத்துள்ளார் . பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் இராவணன்,ஒரு வலிமையான கதையில் காதல் காட்சிகள் கிரைம் காட்சிகள் மட்டும் இல்லாமல் உளவியல் சார்ந்த ஒரு விஷயத்தையும் நுட்பமாக இந்தப் படத்தில் புகுத்தி அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார். கிளைமாக்ஸ் வரை உண்மையான குற்றவாளியை யூகிக்க முடியாதபடி திரைக்கதையை கட்டமைத்திருப்பது இயக்குநரின் பலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில், ‘அந்தரன்’ படம் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.