சென்னை:
“கான் சிட்டி” என்ற இப்படத்தில் அர்ஜுன் தாஸ்,அன்னா பென்,யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் ,நந்தகோபால்,VTV கணேஷ்,தீபா ராமானுஜம், ராதா ரவி, அருள் தாஸ்,ஷாஜி சென்,தம்பி ராமையா,ரமேஷ் திலக் ,பரத்வாஜ் ரங்கன்,இமான் அண்ணாச்சி,பொன்வண்ணன்,ராகு எசக்கி, சதானந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் ஹரிஷ் துரைராஜ்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தனது வாழ்க்கையில் பலவித இன்னல்களை அனுபவித்த அர்ஜுன் தாஸ் தவறான வழியில் பணம் சேர்த்துப் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர் மாதா மாதம் வீட்டுத்தவணை கட்ட முடியாததால் வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டு கடன் வாங்குகிறார். ஆனால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கிறார்.இதனால், தான் பணிபுரியும் மின்வாரியத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் அர்ஜுன் தாஸ். மின்வாரியத்தில் வாடிக்கையாளர்கள் பணத்தை கட்டினால் அவர்களுக்குப் போலி பில்லை கொடுத்து ஏமாற்றி அந்தப் பணத்தைச் சுருட்டிக் கொள்கிறார்.
இந்த சூழ்நிலையில் அன்னாபென் வாடகைக்கு வீடு பிடித்து அதை லீசுக்கு விட்டு ஒரு கம்பெனியின் பெயரில் மோசடி செய்து வருகிறார். இவர்களுடன் போலியான டிரஸ்ட் நடத்தி வரும் யோகி பாபுவும், வடிவுக்கரசியும் அன்னாபென்னுடன் இணைந்து இந்த மூவரும் பண மோசடி செய்கிறார்கள். அப்போது அர்ஜுன் தாஸ் பணத்தை இரட்டிப்பாக்கும் தொழிலில் தன் நண்பனுடன் இணைந்து செயல்படுகிறார். இதில் தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்து அதை இரட்டிப்பாக்க அர்ஜுன் தாஸுடன், யோகி பாபுவும், வடிவுக்கரசியும் அன்னாபென் இந்த மூவரும் இணைகின்றனர். பண மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன் தாஸிடம் அவரது நண்பன் பத்து கோடி கொடுத்தால் பதினைந்து கோடி கிடைக்கும் என்று சொல்கிறார். ஐந்து கோடி பணத்திற்கு ஆசைப்பட்ட அர்ஜுன் தாஸ் தனது நண்பனிடம் பத்து கோடி பணத்தைக் கொடுக்கிறார். பத்து கோடி பணத்தை வாங்கிச் சென்ற நண்பனை கொலை செய்து விடுகிறார்கள்.
பணம் பறிபோய் வி ட்டதால் இந்த நான்கு பேர் செய்த பண மோசடிகளை காவல்துறையினர் கண்டு பிடித்து அவர்களை போலிசார் கைது செய்கின்றனர். இந்த சமயத்தில் இந்த நால்வரும் காவல் நிலையத்திலிருந்து தப்பித்து கர்நாடகாவுக்கு சென்று அங்கே சரவணா ஓட்டல் என்ற பெயரில் உணவகத்தை வைத்துப் பிழைக்கிறார்கள். இதற்கிடையே அவர்கள் இருக்கும் இடத்தை கண்டிபிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். இறுதியில் நான்கு பேருடன் இணைந்து செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் திட்டம் நிறைவேறியதா? அவரிடமிருந்து நான்கு பேரும் மீண்டு வந்தார்களா? என்பதுதான் “கான் சிட்டி” படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் அர்ஜுன் தாஸ் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மின்வாரியத்தில் வேலை செய்யும் ஊழியராக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் கடன்காரரின் தொல்லை தாங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் பில் போடாமல் செய்யும் மோசடி செய்யும் காட்சிகளில் யதார்த்தமாகவே நடித்திருக்கிறார். அன்னா பென்னின் மகனைக் காப்பாற்ற அவர் பாசமுள்ள ஒரு மனிதராக நன்றாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
அன்னாபென், வடிவுக்கரசி,யோகிபாபு,சிறுவன் அகிலன் ஆகியோரை சேர்த்துப் பார்க்கும்போது நல்லதொரு குடும்பம் போல் தெரிகிறது. காட்சிகள் நகர நகர ஒவ்வொருவர் உண்மை முகமும் வெளியாகி நம்மை அதிர வைக்கிறது.
ஹோட்டல் காரராக வரும் இமான் அண்ணாச்சியும், விடிவி கணேஷ் மின்வாரிய அலுவலகத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து இவர் செய்யும் காமெடியும் சிரிக்க வைக்கிறது.
அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் அனைவரையும் ரசிக்க வைக்கிறார் ஷான் ரோல்டன்.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவில், காட்சிகள் தெளிவாக இருந்தாலும் பல காட்சிகள் டார்க் காமெடி ரகத்தில் மாறுபட்ட கோணத்தில் படமாக்கி இருக்கிறார்.
இப்போதுள்ள மனிதர்களின் பணத்தாசையையும் அதனால் அவர்கள் சிக்கிக்கொள்ளும் நூதன ஏமாற்று வேலைகளையும் மையமாக வைத்து இக்கதையை யோசித்து ஹாரிஸ் துரைராஜ் படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இப்படத்தின் குடும்ப உறவுகள், பணத்தாசை, ஏமாற்றுத் திட்டங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களை நகைச்சுவை கலந்த திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், “கான் சிட்டி” அனைத்து ரசிகர்களும் ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.