11 வேடங்களில் யோகி பாபு… ஹீரோவும் அவர், வில்லனும் அவரே! பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லரால் ஆச்சரியப்படுத்தும் 9 லைட்ஸ் நிறுவனம்!
CHENNAI:
தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் தனது திரைப்பயணத்தில் இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய சவாலை ஏற்றுள்ளார். 9 லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படத்தில் அவர் ஒரே நேரத்தில் 11 முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க உள்ளார்.
9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை, இயக்குநர் ஆர். கிஷோர் குமார் இயக்குகிறார். இயக்குநர் விடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் கிஷோர் குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம், காமெடி, ஆக்ஷன், சஸ்பென்ஸ் ஆகிய மூன்றையும் இணைக்கும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம், யோகி பாபு ஏற்றுள்ள 11 கதாபாத்திரங்களே. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், இரட்டையர் வேடங்களிலும், பல்வேறு மொழிகளில் பேசும் தனித்துவமான பாத்திரங்களிலும் அவர் தோன்றுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி தோற்றம், உடல்மொழி, பேச்சு நடை மற்றும் மனநிலையை உருவாக்குவதற்காக அவர் தீவிரமான தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் கதை ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தையும், அதில் காணாமல் போன பிளாக் பாக்ஸை தேடும் பரபரப்பான பயணத்தையும் மையமாகக் கொண்டது. விபத்துக்கான உண்மையை கண்டறிய முயலும் நாயகன் எதிர்கொள்ளும் மர்மங்கள், எதிரிகள், சவால்கள் ஆகியவை காமெடி மற்றும் அதிரடி அம்சங்களுடன் சுவாரஸ்யமாக திரையில் சொல்லப்படவுள்ளன.
மலையாள நடிகை கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், , , , உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை ஜி. பாலமுருகன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை தாமு மேற்கொள்கிறார்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மற்றும் ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒரே படத்தில் 11 கதாபாத்திரங்களில் யோகி பாபு நடிப்பது மட்டுமல்லாமல், காமெடி, ஆக்ஷன், மர்மம் ஆகிய மூன்று அம்சங்களையும் இணைக்கும் இந்த பான் இந்தியா திரைப்படம், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க புதிய முயற்சியாக உருவாகி வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.