சென்னை:
பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் தயாரித்து, சமீபத்தில் வெளி வந்துள்ள படம்தான்க் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஜய் ஆர் ஞானமுத்து. இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்டி ஜாஸ்கெலைன் டிசெரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலிட், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்லிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. .இந்த பாகத்தில் அருள்நிதி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டிமாண்டி காலனி’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் இதில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் பிரியா பவானி ஷங்கரின் காதல் கணவருக்கு புற்றுநொய் பாதித்ததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சூழ்நிலையில் முதல் பாகத்தில் இறந்து விட்டதாக நினைத்த அருள்நிதி மீட்புக் குழுவால் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார். அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு ஒன்று உருவாவதும் இரட்டையர்களில் ரகு என்ற அருள்நிதிக்கு தனது இன்னோரு சகோதரன் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. தன் தந்தையின் இறப்பிற்கு பிறகு சொத்துக்களை அபகரிக்க திட்டம் போடுகிறார் ரகு என்ற அருள்நிதி. .அவரது தந்தையின் இரண்டாவது மனைவி மற்றும் மகளும் சொத்தில் பங்கு கேட்கின்றனர். தந்தையின் முழு சொத்துக்களையும் அடைய வேண்டும் என்றால் மருத்துவமனையில் இருக்கும் தம்பி சாகவேண்டும் என்று அவரை கொல்வதற்கான செயல்களில் ஈடுபடுகிறார் ரகு என்ற அருள்நிதி.
அந்த சமயத்தில் ஒரு முக்கிய காரணத்திற்காக தம்பி சீனிவாசன் என்ற அருள்நிதி உயிரோடு இருக்க வேண்டும் என்று கூறி, ரகு என்ற அருள்நிதியை தடுக்கிறார் பிரியா பவானி சங்கர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தம்பி அருள்நிதியை காப்பாற்ற சக்தி வாய்ந்த புத்தபிட்சுகள் உதவியை நாடுகிறார் பிரியா பவானி சங்கர். பிறகு ரகு என்ற அருள்நிதியையும், புத்தபிட்சுவையும் தன்னுடன் இணைந்து டிமாண்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார். அங்கு சென்றவுடன் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அந்த டிமாண்டி காலனியில் நடக்கும் அமானுஷ்ய சக்தியிடமிருந்து அவர்கள் காப்பாற்ரப்பட்டார்களா?இல்லையா?என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பயமுத்தி இருப்பதுதான் “டிமாண்டி காலனி -2” படத்தின் மீதிக் கதை.
சீனிவாசன்-ரகுநந்தன் ஆகிய இரண்டு கதாபாத்திரத்திரங்களில் நடித்திருக்கும் அருள்நிதி மிக சிறப்பாக தனக்கு கொடுத்து இருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்து இருக்கிறார் இயக்குனரின் நடிகராக இப்படத்தில் மிரட்டி இருக்கிறார். கட்டிலில் படுத்தபடி அந்தரத்தில் மிதப்பது, நாற்காலிகளை ஏணி போல் அடுக்கி அதிலிருந்து கீழே விழுவது போன்ற பல ஸ்டண்ட் காட்சிகலில் தனது நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.
டெபியாக நடித்திருக்கும் பிரியா பவானிசங்கர் படம் முழுவதும் வரும் அனைத்து காட்சிகளிலும் அதிக சிரத்தை எடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து, அதை தாங்கி பிடித்து நடித்துள்ளதற்கு கைத்தட்டல் கொடுக்கலாம். மன வேதனை,அழுகை, கோபம், சோகம், பயம் என்று தன்னுடைய உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்து இருக்கிறார்.
முத்துக்குமார், அருண் பாண்டியன், சீன நடிகர் செரிங் டோர்ஜி,பிக்பாஸ் சீசன் 7 புகழ் அர்ச்சனா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மிக சிரப்பாக நடித்திருக்கிறார்கள்.
சாம் C.S யின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். காட்சிக்கு காட்சி திகிலூட்டுகின்ற விதத்தில் அனைவரையும் பயமுறுத்துகிறது. பாடல்கள் சுமார் ரகம்தான்.
ஒளிப்பதிவாளர் ஹரீஷ்கண்ணன், இயக்குநரின் கதையின் தன்மைக்குத் ஏற்றபடி காட்சிகளைக் அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
கதை எழுதி இயக்கி இருக்கும் இயக்குனர் அஜய் ஞானமுத்து, ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மிரட்ட வைக்க முயற்சித்தாலும், ஒரு நல்ல கதையை சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து அதிக கவனம் செலுத்தி மிக திரிலிங்காக அனைவரையும் பயமுறுத்தி இருக்கிறார் இயக்குநர். அவருக்குப் பாதி வெற்றிதான் என்றாலும் இன்னொரு பாகமும் இருக்கிறது என்று முடித்திருப்பது அவருடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது.
மொத்தத்தில் “டிமாண்டி காலனி -2” பேய் பட ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங்- 3/5.
RADHAPANDIAN.