சென்னை;
நடிகர் விமல், சாயா தேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெய பாலன், விஜய் முருகன், சரவண சக்தி, ஸ்ரீராம கார்த்திக், பிரானா, எலிசபெத் ம்ர்ரும் பலர் நடித்திருக்கும் படம்தான் “சார்’ இபடத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் போஸ் வெங்கட்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மாங்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த பிள்ளைகள் யாரும் படிக்கக் கூடாது என்பதற்காக கடவுள் பெயரை சொல்லி அவர்களை பயமுறுத்தி பள்ளியில் படிக்க விடாமல் செய்து விடுகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து விட்டால் அவர்களை அடக்கி ஆள முடியாது என்ற நோக்கத்தில் அவர்களுக்கு கிடைக்கும் கல்வியை தொடர்ந்து ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் தடுத்து தடை செய்து வருகிறார்கள். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் அந்த பயத்தை போக்கி ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை கட்டி அதில் தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகளை படிக்க வைக்க முயற்சி செய்து படிப்பு சொல்லிக் கொடுக்கிறார். இந்த சூழ்நிலையில் மாங்கொல்லை கிராமத்தில் உள்ள ஆதிக்க ஜாதியை சேர்ந்தவரான சாமியாடி ஜெயபாலன், அந்த ஆசிரியருக்கு பைத்தியம் என்று சொல்லி அவரை ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.
ஆனால் அவரது மகன் சரவணன், அந்தப் பள்ளியை தன் பொறுப்பில் எடுத்து ஆரம்பப் பள்ளியை நடுநிலைப்பள்ளி ஆக்குகிறார். சரவணன் மகன் விமல் அந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றி அந்த ஊர் மக்களை கல்வியறிவில் மேம்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். காலம் மாறி தலைமுறைகள் கடந்தாலும் சாதியும் கடவுள் நம்பிக்கை என்ற பெயரிலும் மூடநம்பிக்கையும் அந்த ஊர் மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவே அமைகிறது. இந்த சூழ் நிலையில் பள்ளியே வேண்டாம் என்று கிராமத்தில் உள்ள சிலர் அடாவடி செய்து பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிவு செய்கின்றனர். ஆனால் விமல் அந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக மாற்ற முயற்சிக்கிறார். இந்த சூழலில் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் அந்த பள்ளியை இடித்தார்களா? விமல் அந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக மாற்றினாரா? என்பதுதான் ‘சார்’ படத்தின் மீதிக் கதை.
சிவஞானம் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் விமல் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார். காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் கதைக்கு ஒத்து வரவில்லை என்றாலும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி முக்கியம், என்று நினைக்கும் ஆசிரியர் அரசன் கதாபாத்திரத்தில் சரவணன் கச்சிதமாக பொருந்தி நடிப்பில் கலக்கி இருக்கிறார். அவர் தன் கதாபாத்திரத்தை நன்கு புரிந்துக் கொண்டு, மிக எளிமையாக மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் அவரது குணச்சித்திர நடிப்பு பாராட்டத்தக்கதாக இருக்கிரது.
கதாநாயகியாக சாயா தேவி சக ஆசிரியையாக, சில காதல் காட்சிக்காக நாயகியாக நடிக்க வைக்கப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டி ஒரு முக்கியத்துவம் அவரது கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதை பாராட்டலாம்.
ரமா, ஜெயபாலன், கஜராஜ், சரவண சக்தி, விஜய் முருகன், ப்ரனா, எலிசபெத் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரிஷ் ஒளிப்பதிவு மூலம் மிகவும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
கல்வியை தாழ்த்தப்பட்ட மக்களும் படிக்க வெண்டும் என்ற ஆர்வத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதையும், கல்வி அறியாத மக்களுக்கு அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, கொண்டு சேர்க்க நினைக்கும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர், அவருடைய மகன், அவருடைய பேரன் என மூன்று தலைமுறை செய்த சேவையை, ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால், எவ்வளவு இடையூறாக இருப்பதையும், முட்டுக்கட்டை போடுவதையும் மிக ஆழமாக, அழுத்தமாக சொல்லி, உணர்ச்சிகரமான காட்சிகளையும் நேர்த்தியாக காட்டி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.
மொத்தத்தில், ‘சார்’ படம் கல்வி என்பது அனைவருக்கும் முக்கியம் என்று சொல்லும் படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.