சென்னை:
புதுமுகம் ராஜு ஜெயமோகன், விக்ராந்த், ஆதியா, பவ்யா ட்ரிக்கா, சார்லி, மைகேல், சரண்யா, தேவதர்ஷினி, மைக்கேல் டாக்டர் லங்கேஷ், நிஹாரிகா, விஜே பப்பு, பாரதி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “பன் பட்டர் ஜாம்” ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராகவ் மிர்தாத்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இப்படத்தில் கதாநாயகன் நடிக்கும் ராஜு தன் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் பிளஸ் டூ முடித்தவுடன் பொறியியல் கல்லூரியில் சேருகிறார் அவருடன் உயிர் நண்பன் மைக்கேலும் அந்தக் கல்லூரியிலேயே படிக்க வருகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த ராஜு, தினமும் தன் நண்பன் மைக்கேல் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக கல்லூரிக்கு செல்கின்றனர். பெண்களை கண்டாலே பயந்து நடுங்கும் ராஜூ அவரது கல்லூரியில் படிக்கும் பவ்யா ட்ரிக்காவை சந்திக்கிறார். பவ்யா ட்ரிக்கா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பவ்யா ட்ரிக்காவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் ராஜுவின் நண்பன் மைக்கேல் ஒருதலையாக பவ்யா ட்ரிக்காவை காதலிக்கிறார்.
அப்போது தன் நண்பன் ராஜு பவ்யா டிரிக்காவை காதலிப்பது மைக்கேலுக்கு தெரிகிறது. இதனால் ராஜு மீது வெறுப்பு ஏற்பட்டு அது பொறாமையாக மாறி திடீரென்று, அவர்கள் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டு பிரிகிறார். இந்த சூழ்நிலையில் ராஜுவின் பெற்றோர் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார்கள் அங்கு ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினியை சந்திக்கிறார். அவர் தன் கணவர் சார்லி படித்த பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்பது பிறகு தெரிகிறது. இந்த நிலையில் தேவதர்ஷினி தன்னுடைய மகளைப் பற்றி உயர்த்தியும், அதே போல சரண்யாவும் தன் மகனை பற்றி பெருமையாகவும் பேசிக் கொள்கின்றனர். சரண்யா பொன்வண்ணனும், தேவதர்ஷணியும் இணைந்து இவர்களது மகனையும் மகளையும் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் தேவதர்ஷினி சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு அருகிலேயே குடி வருகிறார். இருவரும் அடிக்கடி தங்களது மகன் மகள் இருவரையும் ஒன்றிணைத்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் ராஜுவின் காதலி பவ்யா ட்ரிக்கா மைக்கேல் எதற்காக ராஜூவை வீட்டு பிரிந்தார் என்பதை கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜுவின் காதல் வென்றதா? இறுதியில் பெற்றோர்களின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் “பன் பட்டர் ஜாம்” படத்தின் மீதிக் கதை..
பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜூ இந்தப் படத்தில் இளம் கதாநாயகனாக கதைக்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவர் எதார்த்தமாக நடித்திருப்பதோடு, காமெடிக் காட்சிகளிலும் அசத்தி அனைவரையும் ரசிக்க செய்கிறார். ஒரு கட்டத்தில் பொறுப்பான தன் குடும்பத்திற்காக வாழும் மகனாக அழகான மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு ராஜுவைத் தேடி பல படங்கள் வரும் என்பதில் ஐயமில்லை.
கதாநாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா அழகிலும், நடன அசைவுகளிலும் கவனம் ஈர்ப்பதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். படத்தில் தன்னுடைய பங்களிப்பை மிக சிறந்த முறையில் கவனிக்க வைத்துள்ளார்.
மற்றொரு கதாநாயகி ஆதியா தனது சிறந்த நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்து நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஆதியாவை காதலிக்கும் விஜே பப்பு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கல கலப்பாகவும், துறுதுறுப்பு காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மைக்கேல்,இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாக இருக்கிறார். திரைக்கதைக்கேற்ப சரியாக நடித்து ‘இப்படியும் ஒரு நண்பனா’?’ என்று கேள்வி கேட்க வைத்திருக்கிறார்.
சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் திரைக்கதைக்கு தகுந்தவாறு நடித்து படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
கெளரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் பெறுகிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் இரண்டு பாடல்கள் ரசித்துக் கேட்க வைக்கின்றன.பின்னணி இசையை இளமை துள்ளலோடு அமித்து இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது..
ஒளிப்பதிவாளர் பாபு, வண்ணமயமாகக் காட்சிகளை படமாக்கி கதாநாயகிகளின் முக அழகையும், உடல் அழகையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இளைஞர்களை கவர்ந்து இருக்கிறார்.
கதை, எழுதி இயக்கியிருக்கிறார் ராகவ் மிர்தாத். இன்றைய சூழலில் இளம் சமுதாயத்தினர் செய்யும் உண்மையான வாழ்க்கையை எந்த தொய்வில்லாமல் காதல், நட்பு, காதல் திருமணம், பெற்றோர் களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம் போன்ற பல விஷயங்களை கதையில் புகுத்தி இளைஞர்கள் ரசிக்கும் வண்ணம் இந்தபடத்தை இயக்கி இருக்கிறார். ஆனால் தேவையில்லாமல் லேப் டாப் முன் அமர்ந்து டிஸ்யூ பேப்பரில் ராஜு கை துடைக்கும் காட்சி படம் பார்க்கும் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘பன் பட்டர் ஜாம்’ இளைஞர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.