“இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!

சென்னை:
“கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக,சங்கத்தின் தலைவர் திரு.நாகா அவர்களின் தலைமையில், செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களின் மேற்பார்வையில், “இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகில், சாலை நடுவில் அமைந்துள்ள 1000-சதுரடி பூங்காவில், “இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் பலகை நிறுவப்பட்டுள்ள இடத்தில், “கே.பாலசந்தர் திருஉருவ படத்திற்கு, “கே.பாலசந்தர் அவர்களின் மகள் திருமதி.புஷ்பா கந்தசாமியும், மருமகன் திரு.கந்தசாமி இருவரும் மலர் தூவி வணங்கினர். திரையுலக பிரபலங்களும்,மைலாப்பூர் மாநகராட்சியின்* *அதிகாரிகளும், AE,EE,அவர்களும், மற்றும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளும், ரசிகர்களும் இணைந்து மலர் மாலை சூட்டி,மலர் தூவியும்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியடைந்தனர்.
அதே சமயத்தில் நடிகர், கமலஹாசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான, ராஜ்கமல் பிலிம்ஸ் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள “கே.பாலசந்தர் திரு உருவ சிலைக்கு மலர் மாலை சூட்டி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. பிறகு கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக சங்க நிர்வாகிகளும், தமிழ் திரையுலகை சார்ந்த சில பிரபலங்களும் இணைந்து தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் அருகில் பொதுமக்களுக்கு இனிப்புடன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.